Tech News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tech News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூகுள்மேப் மூலம் லோக்கேஷனை சேர் செய்துவது எப்படி?



தற்போது ஆன்ட்ராய்டு போன்கள் வந்ததால், ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் உதவியோடு நாம் எங்கு செல்கின்றோம் என்று தேடினால் ரூட் மேப்பில் கிடைக்கும். மேலும், அந்த ரூட் மேப்பில் ஸ்கிரீன் காட்டும், கூகுள் மேப் செயலில் உள்ள ரூட் ஆப்சனில் தேர்வு செய்து நமது விருப்பத்திற்கு ஏற்படியும் பயணம் செய்யலாம்.

அதில் எத்தனை கி.மீ, பயண நேரம், நாம் எந்த வாகனத் தேர்வு செய்கின்றோம். வழியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று காட்டும். இந்நிலையில் கூகுள் மேப் எவ்வாறு நமக்கு வழியை காட்டுகின்றது. இதை வைத்து நமது லோக்கேஷனை எவ்வாறு அடுத்தவர்களுக்கு சேர் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஸ்டேப் 1: உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பிற்கு சென்று லோகேஷன் தேர்வு செய்யது கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 2: கூகுள் மேப்பில் அதில் நீங்கள் செல்லும் இடம் குறித்து டைப் அல்லது மைக் மூலமாகவும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 3: பெயரை சொல்லி முடித்ததும்கூகுள் மேப் உங்களுக்கு ப்ளூ கலரில் நீங்கள் செல்லும் வழிக்கு வழியை கட்டுவது மட்டுமில்லாமல் எவ்வளவு ட்ராபிக் இருக்கின்றது என்பதையும் உங்களுக்கு காட்டும்.

ஸ்டேப் 4: இன்டர்நெட் இல்லை என்றால் கவலை பட வேண்டாம். இந்த ஆப் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தலாம்.

ஸ்டேப் 5: கூகுள் மேப் மூலமாக நாம் கேப் புக்கிங் செய்தும் கொள்ளலாம். மேலும் நீங்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு சார்ஜிங் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கும்.

ஸ்டேப் 6: நாம் செல்லும் இடம் குறித்து கூகுள் மேப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். லேக் கேஷன் சேர் என்று இருக்கும் அதை தேர்வு செய்து, வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் நாம் அனுப்ப முடியும்.

ஸ்டேப் 7: அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றார். சரியான வழியில் தான் வருகின்றாரா எனவும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், அவரை எளிமையாகவும் நாம் வரவேற்றுக் கொள்ள முடியும்.


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா? சரி செய்ய சூப்பர் டிப்ஸ்


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் போதுமான மெமரி மற்றும் சீரான இணைய வசதி இருந்தும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்ய முடியாமல் போவது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை தான். இதுபோன்ற சூழ்நிலைகளில் செயலிகளை டவுன்லோடு செய்ய முடியாமல் போவது மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை அப்டேட் செய்ய முடியாமல் போவதற்கான காரணங்களும் அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் கவனிக்க வேண்டியவை: பிரச்சனைகளை ஆய்வு செய்ய துவங்கும் முன் ஸ்மார்ட்போனில் சீரான இணைய வசதி இருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். சில சமயங்களில் இணைய வசதியில்லாததும், கூகுள் பிளே ஸ்டோர் இயங்காமல் போவதற்கு காரணமாக இருக்கலாம். மற்றொரு முக்கிய விஷயம் அதிக மெமரி கொண்ட செயலிகள் வைபை கனெக்டிவிட்டியில் டவுன்லோடு ஆக காத்திருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் Download Over WiFi ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு அவ்வாறு இருப்பின் அதனை ஆஃப் செய்ய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்த பின்பும், செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முடியவில்லை எனில், கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

கேச்சி
 பிளே ஸ்டோரின் கேச்சி டேட்டாவை சரி செய்து அவற்றை அழிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பிரச்சனை சரியாக வாய்ப்பு இருக்கிறது. 

1 - ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும் 

2 - இனி அப்ளிகேஷன்ஸ் அல்லது ஆப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும் 

3 - கூகுள் பிளே ஸ்டோர் செயலியை தேர்வு செய்ய வேண்டும் 

4 - ஸ்டோரேஜ் ஆப்ஷனில் க்ளியர் கேச்சி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

5 - இனி க்ளியர் டேட்டா ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் 

6 - இவ்வாறு செய்ததும், பிளே ஸ்டோர் சென்று செயலிகளை டவுன்லோடு செய்ய முயற்சிக்கலாம்

இவைதவிர மேலும் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சிலசமயங்களில், பயனர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை செட்டப் செய்தவுடன் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முற்படுவர். இதுபோன்ற சூழ்நிலைகளில் கூகுள் அக்கவுண்ட் சின்க் மோடில் இருந்தாலோ அல்லது அக்கவுண்ட்டுடன் தொடர்பு கொண்டிருக்கும் செயலிகள் டவுன்லோடு ஆகும் போது பிளே ஸ்டோரில் காத்திருப்பதை உணர்த்தும் ஐகான் தோன்றலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் டவுன்லோடு அல்லது சின்க் நிறைவுறும் வரை காத்திருந்து செயலியை டவுன்லோடு செய்ய முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் "எலிசா" டீச்சர்.! இவங்க வெறும் டீச்சர் இல்ல "ரோபோட் டீச்சர்".!

பின்லாந்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ரோபோட்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றன. "எலிசா" என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் பள்ளி மாணவர்களுக்கு மொழிப் பாடங்களை மிகத் துல்லியமாகக் கற்பிக்கிறது.

இந்த எலிசா ரோபோட்டினால் சுமார் 23 மொழிகளைப் புரிந்துகொள்ள முடியுமாம். அதேபோல் பேசவும் முடியும் என்று இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்சமயம் இந்த எலிசா ரோபோட், ஆங்கிலம், ஜெர்மனி மற்றும் பின்னிஷ் என்று வெறும் 3 மொழிகளில் மட்டுமே செயல்படும்படி வெளிவந்துள்ளது.

குழந்தைகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எலிசா ரோபோட் பொறுப்பாகவும், அழகாகவும் பதில் அளிக்கிறது. குழந்தைகளின் உணர்வுகள் உணர்ந்து நடந்துகொள்ளும் படி இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக எலிசா ரோபோட்டிற்கு கேமரா மற்றும் பிரத்தியேக சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்குக் கதைகள் சொல்லுவது, நடனம் ஆடுவது, பாடுவது எனப் பல வித்தைகளை தன்னுள் வைத்துள்ளது. மருத்துவம், விவசாயம் எனப் பல துறைகளில் ரோபோட்களின் வருகை அதிகரித்துள்ளது. தற்பொழுது கல்வித் துறையிலும் ரோபோட்கள் கால் பதித்திருப்பது எதிர்காலத்திற்கான அடுத்தபடி முயற்சி என்றே கூறவேண்டும்.

பாஜக-பீப் ஜனதா பார்ட்டி ஆனது: இணையத்தில் ஹேர்கர்கள் அட்டூழியம்.!

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு மாட்டிறைச்சி படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா பார்ட்டி என்று அழைக்கப்பட்டதை பீப் ஜனதா பார்ட்டி என்று ஹேக்கர்கள் இணையத்தை மாற்றியுள்ளனர். 

மேலும் இணைய பக்கம் முழுக்கவும் மாட்டிறைச்சி படங்கள் பதிவு செய்துள்ளனர், மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என்றும் மாற்றப்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாஜக இதை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

2ம்முறையாக பதிவேற்றார் மோடி: தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜ கூட்டணி சுமார் 350 இடங்களை பிடித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் 2வது பிரதமராக மோடி பதிவேற்றுள்ளார். தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில் பொறுப்பேற்றுள்ளது.

மோடி மற்றும் பாஜ மீது வெறுப்பு: பாஜக அதிக இடங்களில் நடந்த முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பாமையாக சுமார் 303 இடங்களில் பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவும், வெறுப்பு காரணமாகவும் ஒரு சில செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாஜ இணையதளம் ஹேக்: இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் மீண்டும் பொறுப்பு பேற்றுள்ளது. இதனால் ஆந்திரமடைந்த சிலர், ஹேக்கர்கள் மூலம் பாஜ இணையதளத்தை ஹேக் செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செயல்படும் இணையதளத்தை முற்றிலுமாக ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்டு பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பீப் ஜனதா பார்ட்டி: ஹேர்கள் பாஜ இணையதளத்தை ஹேக் செய்து பாரதிய ஜனதா பார்ட்டி ( Bharatiya Janata Party) என்பதற்கு பதிலாக பீப் ஜனதா பார்ட்டி ( Beef Janata Party) என்று பெயரையும் மாற்றி பதிவேற்றம் செய்துள்ளனர்.

மாட்டிறைச்சி புகைப்படங்கள்: இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் ஹேர்கள் நிரப்பியுள்ளனர். பாஜவுக்கு மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என்று அனைத்து தகவல்களையும் மாற்றியுள்ளனர்.

ரூ.3699-விலையில் டிடெல் நிறுவனத்தின் குட்டி எல்இடி டிவி அறிமுகம்.!

டிடெல் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி, மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் 17-இன்ச் கொண்ட குட்டி டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது இந்த அட்டகாசமான நிறுவனம். கண்டிப்பாக இந்த டிவி மாடல் இந்தியா முழுவதும் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்குதகுந்த தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த சிறிய டிவி மாடல் பெயர் என்னவென்றால் டி1 ஸ்டார் எல்இடி டிவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

17-இன்ச் டிஸ்பிளே இந்த எல்இடி டிவி மாடல் பொதுவாக 17-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்ப 1,920 X 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக சில ஆன்லைன் தளங்களில் இந்த டிவி மாடல் கிடைக்கிறது.

10வாட் ஸ்பீக்கர்கள் மேலும் 10வாட் ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த டி1 ஸ்டார் எல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளதால் சிறந்த ஆடியோ மற்றும் திரை அனுபவம் கொடுக்கும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் எடை குறைவாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் வைத்துப் பார்க்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்: எச்டிஎம்ஐபோர்ட், யுஎஸ்பி போர்ட், விஜிஏ இன்புட், ஆடியோ அவுட்புட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பெரிய ஸ்மார்ட் டிவிகள் கொடுக்கும் வசதியை இந்த சிறிய எல்இடி டிவி மாடல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் செயலியில் கிடைக்கிறது புதிய வசதி: ட்ரை பண்ணுங்க மக்களே.!


வாட்ஸ்ஆப் நிறவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) என்ற பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

இருமாதங்கள் சோதனைக்கு பின்பு.. இதற்க்குமுன்பு கடந்த மார்ச் மாதம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது, பின்பு இருமாதங்கள் சோதனைக்கு பின்பு இந்த புதிய வசதி அனைவருக்கும் வழஙப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஸஜ்களை தொடர்சியாக கேட்க முடியும்.

புதிய அப்டேட் இந்த செயலியில் இப்போது வாய்ஸ் ய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். குறிப்பாக புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே கிளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். பின்பு இதனுடன் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் CVE-2019-3568பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைவேர் தாக்குதல் அன்மையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது, இந்த ஸ்பைவேர் பொதுவாக பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. பின்பு வாய்ஸ்கால் அழைப்பை பயனர் ஏற்றபலும் ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

மின்னஞ்சல் ஸ்பைவேர் பொறுத்தவரை பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜிபிஎஸ், லோகேஷன் மின்னஞ்சல் போன்ற பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டது.

விளம்பரங்கள் தோன்றும் மேலும் 2020-ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுபற்றிய அறிவிப்பு நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வருடாந்திர விளம்பர பொதுக்கூட்டத்தில் வெளியாகி இருக்கிறது.மேலும் வாட்ஸ் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் குறிப்பாக டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது திட்டம் இந்நிறுவனத்தின் இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆகும், அதன்படி வாட்ஸ்ஆப் (ஐ.ஜி) கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது திட்டத்தில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும், இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் விளம்பரங்களை தோன்றுவதை போன்று செயல்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

சியோமி 32இன்ச் டிவி ரூ.12,499: எம்ஐ-க்கு விலையை குறைந்த பிளிப்கார்ட்.!



சியோமியின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.12,499க்கு விலையை அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். மேலும், சியோமியின் அனைத்து மாடல் ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது உலகப் கோப்பை நடப்பதையொட்டி இந்த ஆப்பரை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், 30 நாட்களுக்குள் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளும் வசதியும், பிளிப்கார்ட்டில் வாங்கும் போது 90% கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டி: 



தற்போது உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளது. ஜூலை 14-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றது. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்-இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் ஆப்பர்: 



இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சியோமியின் எம்ஐ டிவிகள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் விற்பனை துவங்கியுள்ளது. இன்று மட்டுமே கடைசி நாளாகும். மேலும், இதில் எக்சேஞ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது. 90% சதவீதம் எக்ஸ்சேஞ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 நாட்களுக்குள் டிவியை பரிமாற்றிக் கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது பிளிப்கார்ட்.

எம்ஐ எல்இடி 4ஏ ஸ்மார்ட் டிவி (32இன்ச்): 



32இன்ச் திரையுள்ள டிவி ரூ.14,499 ஆகும். தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.12,499விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4ஏ புரோ ஸ்மார்ட் டிவி (43 இன்ச்) : 



இந்த 43இன்ச் டிஸ்பிளே டிவி விலை ரூ.25,999 ஆகும். தற்போது ரூ,22,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ4ஏ புரோ ஸ்மார்ட் டிவி (49 இன்ச்): 



இந்த 49 இன்ச் டிவி விலை ரூ.32,999 ஆகும். இதன் விலை தற்போது 29,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4எக்ஸ் புரோ ஸ்மார்ட் டிவி (55 இன்ச்): 



இந்த 55 இன் 4 கே டிவியின் விலை ரூ.49,999 ஆகும். இதன் விலை தற்போது 10 ஆயிரம் குறைக்கப்பட்டு, 39,999 விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4 புரோ ஆன்ட்ராய்டு டிவி: 



55 இன்ச் அளவுள்ள எம்ஐ 4 புரோ ஆன்ட்ராய்டு டிவி 4கே தொழில்நுட்பத்துடன் உள்ளது. இதன் விலை ரூ.54,999. ஆகும் இதை தற்போது ரூ.47,999க்கு வாங்கலாம்.


ரூ.40லட்சம் மதிப்புள்ள ஐபோன்கள் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி.!


அகமதாபாத் போடக்தேவ் பகுதியில், ஐ வெனுஸ் மொபைல் ஸ்டோர் செயல்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இரவு நேரத்தில் நுழைந்த கொள்ளயைர்கள் 35 ஐபோன்கள், செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்களின் முகம் பதிவாகியுள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

கொள்ளையில் 7 பேர்: 

மொபைல் ஸ்டோரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 7 பேர் என தெரியவந்துள்ளது. குறுகிய சந்து வழியே நுழைந்த அவர்கள் கொள்ளையை வெற்றிகரமாக அரங்கேற்றியதும். ஸ்டோரில் இருந்த லாக்கரை உடைத்து பொருட்களை கொள்ளையடிப்பதும் தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் துணிகர கொள்ளை: 

கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஹிதேஷ் மற்றும் ரூன்கா மொபைல் ஸ்டோரை பூட்டி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கடையை திறக்கும் போது, கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிசிடிவி கேமரா காட்சி: 

இதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த 7 கொள்ளையர்களும் சேர்ந்து ஸ்டோருக்கு நுழைந்ததும். அங்கு இருந்த லாக்கரை உடைத்தும், 35 ஐபோன்களையும், ரூ.1.5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. தற்போது, திருடர்களிடம் இருந்து 8 ஐபோன்கள் மட்டும் எஞ்சியுள்ளது.

3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு: 

கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில், வஸ்தாரபூர் போலீஸ் நிலைய எஸ்ஐ எம்ஏ ஜடேஜா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்திய தண்டனை சட்டம் 454, 457, 380 பிரிவுகளில் வழக்கு விசாரணை நடந்து வருகின்றது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்று எஸ்ஐ ஜடேஜா கூறியுள்ளார்.


பட்ஜெட் விலையில் விவோ வ்யை15 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


விவோ நிறுவனம் இன்று விவோ வ்யை15 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்  நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரவிக்க்பபட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற முன்னனி ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று விவோ நிறுவனம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே: 

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் வாட்டர்டிராப் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்: 

இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதள்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது

கேமரா: 

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

சேமிப்பு: 

விவோ வ்யை15 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விவோ வ்யை15 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை: 

விவோ வ்யை15 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,990-விலையில் வாங்க முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?


சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு தற்சமயம் புதிய டாப்-எண்ட் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏழாம் தலைமுறை ஆப்டிக்கல் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மறறும் மென்பொருள் போன்ற அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு இந்த ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில்  கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே: 

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்: 

இக்கருவி ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் மற்றும் அட்ரினோ 640ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு: 

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

கேமரா: 

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா +8எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி: 

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

விலை: 

இந்திய மதிப்பில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.25,200-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.26,200-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.28,230-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.30,245-ஆக உள்ளது. மேலும் இதனுடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் உள்ளது.


உலகின் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படும் 6 வைரஸ்கள் நிறைந்த சாம்சங் லேப்டாப் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக சர்வதேச அளவில் சுமார் 100பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த லேப்டாப் மூலம் சேதாரம் ஏற்பட்டுள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் xp மென்பொருளின் கீழ் இயங்கும் இந்த லேப்டாப் தான் உலகின் அபாயகரமான லேப்டாப் என்று கூறப்படுகிறது. பின்பு இது வெறும் லேப்டாப் மட்டுமல்ல அபாயகரமான இயந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சாம்சங் வெறும் 10.5 இன்ச் அளவிலான திரை மட்டுமே கொண்டு, விண்டோஸ் Xp அமைப்பில் செயல்படும் இந்த சாம்சங் லேப்டாப்பில் உலகின் மிக அபாயகரமான 6 வைரஸ்கள் உள்ளன. இந்த 6 வைரஸ்கள் இதுவரை 7லட்சம் கோடி வரையிலான சேதத்தை உலகில் ஏற்படுத்தியுள்ளது

க்யோ ஒ டாங் பின்பு இதனை உருவாக்கியவர் க்யோ ஒ டாங் என்பவர் ஆவார், சைபர் செக்யூரிட்டி துறையில் ஆழமான உள்ளுணர்வு கொண்ட இவரை ஒரு மிகப்பெரிய கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும். உலகத்தில் 7 லட்சம் கோடி வரையிலான சேதங்களை ஏற்படுத்திய ஒன்றை உருவாக்கிய கலைஞர்.

1.2மில்லியன் 10.5-இன்ச் கொண்ட லேப்டாப் தற்சமயம் ஏலம் விடப்பட்டுள்ளது, இதற்கான துவக்க விலையே 1.2மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த லேப்டாப் ஏலம் விடப்படும் செய்தி வைரலானது, இந்த ஏலம் நிகழ்வு லைவ் ஆகக் ஒளிபரப்பப்படும் அளவுக்கு வரவேற்புப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது இதில் உள்ள அபாயகரமான வைரஸ்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்த லேப்டாப் தற்போது காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது, பின்பு The Persistence of Chaos என்ற இணையதளத்தில் இந்த சாம்சங் லேப்டாப்-க்கான ஏலம் நடைபெறுகிறது.


டாப் 10 பட்டியலில் சுந்தர்பிச்சைக்கு இடம் மறுப்பு: கிளம்பியது புதிய சர்ச்சை.!


பன்னிரண்டு மாதங்கள் என்பது எந்தவொரு தரத்திலும் நீண்ட காலமாக இருக்கிறது, ஆனால் நீங்கள் தொழில்நுட்ப உலகில் இருந்தால், அது வாழ்நாள் போல தோன்றலாம். அதை விட மேலாக நீங்கள் உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தால், அந்த 12 மாதங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படக்கூடும். 

ராயல் டச் ஷெல் 

அதுபோல கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை , 2018 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் புகழ்பெற்ற சி.ஈ.ஓ என அறிவிக்கப்பட்டார்.ஆனால் 12 மாதங்கள் கழித்து அவர் டாப்10 பட்டியலில் கூட இல்லை. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, புகழ் அளவீடு மற்றும் மேலாண்மை சேவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமான 'ரெபுடேசன் இன்ஸ்ட்யூட்", உலகின் 10 புகழ்பெற்ற சி.ஈ.ஓ களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ராயல் டச் ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பென் வான் பெர்டன் முதலிடம் வகிக்கிறார்.

சுந்தர் பிச்சை 

அந்த அறிக்கையின்படி, சுந்தர் பிச்சை மட்டுமே அந்த பட்டியலில் இடம்பெறாத தொழில்நுட்ப நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அல்ல. கடந்த ஆண்டு டாப் 10 பட்டியலில் இருந்த "லிங்கிடு இன்" தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் வீனெர்-க்கும் இந்தாண்டு பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 2018ல் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருந்த 8 சி.ஈ.ஓ-கள் இந்தாண்டு பட்டியலில் இடம்பெறவில்லை.

கூகுள் நிறுவனம் 

சுந்தர் பிச்சையை பொறுத்தமட்டில் ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்னவெனில், "நிறுவனத்தின் பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கையாளுதலில் ஏற்பட்ட சர்ச்சைகள்" மற்றும் ஒரு சில தரவு விதிமீறல்கள் போன்ற சில சிக்கல்களில் கூகுள் நிறுவனம் மற்றும் சுந்தர் பிச்சை கடந்த ஒரு வருடமாக விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர் மற்றும் அதன் காரணமாக கூகுள் பிளஸ் செயலியும் மூடப்படுகிறது.

இன்ஸ்ட்யூட் அறிக்கை 

சுந்தர் பிச்சை புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பற்றி ரெபுடேசன் இன்ஸ்ட்யூட் அறிக்கை கூறியதாவது "சுந்தர் பிச்சையின் தாழ்மையான நடத்தை மற்றும் ஈகோ இல்லாத தலைமை பண்பு போன்றவை கவர்ந்திழுக்கும் சி.ஈ.ஓவாக காண்பித்து மற்றவர்கள் அவரை பின்பற்ற வைத்தது மட்டுமின்றி, 2018இன் மிகவும் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றியது. பிச்சை வலுவான தலைமை என்ற தோற்றத்தையும், தெளிவான மூலோபாய பார்வை மற்றும் எதிர்பார்க்கும் மாற்றத்தை திறமையாக வழங்குபவர் என உணரப்பட்டார்"

#1லிருந்து # 88ஆக வீழ்ச்சியடைந்தது. 

2019 ஆம் ஆண்டிற்கு வேகமாக முன்னேறி பார்த்தால், சுந்தர் பிச்சை முன்னர் சிறந்து விளங்கிய பகுதிகளில் தான் அவரது வீழ்ச்சியே. சுந்தரின் தலைமை பண்பு கேள்விக்குள்ளானது மற்றும் கூகுளின் நியாயமற்ற நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஒரு கொந்தளிப்பான ஆண்டுக்கு பிறகு, 6.5 புள்ளிகள் குறைந்தது. தலைமைத்துவத்தின் வீழ்ச்சியின் காரணமாக, ஒட்டுமொத்தமாக 8.4புள்ளிகள் குறைந்து சுந்தர் பிச்சையின் புகழ் #1லிருந்து # 88ஆக வீழ்ச்சியடைந்தது.

10% பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் 

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ரிபுடேசன் இன்ஸ்ட்யூட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் புகழ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை நிர்ணயிக்கும் முறை குறித்து விவரிக்கையில்," 2019 ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் 14 நாடுகளில் 230,000 க்கும் மேற்பட்ட தனிநபர்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 50% பேருக்கு தெரிந்திருந்த பிரபல நிறுவனங்களின் அனைத்து 140 சிஈஓகளும் கருத்தில்கொள்ளப்பட்டனர்.அந்த சிஈஓ க்கள் குறைந்தபட்சம் 10% பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். "


அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!


ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய பரிமாணத்தில் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் ரீசார்ஜ் பிளான்களை அறிவித்துள்ளது. இதில் பிரீப்பெய்டு மற்றும் போஸ்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற திட்டங்கள் இதில், அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் நாம் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்டை ரூ.1500 செலுத்தி வாங்க வேண்டும். பிறகு மாத வாடகையாக ரூ. 399 செலுத்த வேண்டும். இதில் சிறந்த டேட்டா பிளானும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்பெய்டு ரூ.499 திட்டம்: 



ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்டில் ரூ.499க்கு போஸ்ட்பெய்டு திட்டம் அறிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாதத்திற்கு 75ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடயிம். பிறகு இதன் வேகம் 80கேபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ப்ரீபெய்டு திட்டம் : 



இந்த திட்டத்தின் மாத வாடகை ரூ.399 ஆகும். இதில் 1.5ஜிபியை 84 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. நாம் அதிகமாக பயன்படுத்தி விட்டால் வேகத்த 80கேபிபிஎஸ் ஆகு குறைப்படுகின்றது. நீங்கள் டேட்டாவை பயன்படுத்தாமல் இருந்தால், அடுத்த மாதத்தோடு சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

10 சாதனத்தில் பயன்படுத்தலாம்: 



இந்த ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ் பாட்டை ஓரே நேரத்தில் 10 சாதனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், லேப்டாப், மொபைல்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் டிவிக்ள், சிசிடிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட 10 சாதனங்களில் ஓரே நேரத்தில் பயன்ழுடுத்திக் கொள்ளலாம்.

4ஜி/3ஜி பயன்பாடு : 



இந்த ஏர்டெல் ஹாட்ஸ் பாட் சாதனம் ஓரே வெப்பம் அதிகரிக்காமல் குளிர்ச்சிதரக்கடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டேட்டாவை 4ஜியில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 4ஜி நெட்வோர் கிடைக்காத பட்சத்தில் தானகவே 3ஜி நெட்வொர்காக மாறிவிடும்.

1500 எம்ஏஹெச் பேட்டரி: 



இந்த ஹாட்ஸ்பாட் 6 மணி நேரம் தாக்க கூடிய வகையில், 1500 எம்ஏஹெச் பேட்டரியை வழங்கியுள்ளது. டேட்டா சேவையை மோடத்தின் வாயிலாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


உலகின் முதல் 5ஜி பிசியை உருவாக்கிய குவால்காம் மற்றும் லெனோவோ.!

கம்ப்யூட்டக்ஸ் 2019ல், குவால்காம் மற்றும் லெனோவோவுடன் இணைந்து உலகின் முதல் 5ஜி பிசியை உருவாக்கியுள்ளது.
இதை திட்ட வரம்புக்கு ஏற்றவாறு வடிமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8சிஎக்ஸ் கம்ப்யூட் தொகுதிக்கு குவால் காம் வழங்கும் போது, லெனோவோ மற்ற வன்பொருள் கட்டடைப்பை முடிக்க வேண்டும்.
Snapdragon 8cX 5G என்பது உலகின் முதல் 7nm PC Platform ஆகும். மேலும், இது PC க்கு 5G இணைப்பு வழங்கும் உலகின் முதல் செயல்திறனாகும்.

இணைப்பு விகிதம்:

ஸ்னாப்டிராகன் 8சிஎக்ஸ் கணக்கிடு தொகுதி ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 5ஜி மோடத்தை ஆதரிக்கிறது. இது 4ஜி எல்டிஇயிலும் இணைப்பு விகித்தை வழங்கும்.
ஒரு மடிக்கணியில் 4ஜியை விளையாட்டாகவே நாம் 5ஜி இணைப்பாகவும் பயன்படுத்தவும் முடியும்.

செயல்திறன்:

8சிஎக்ஸ் தொகுதி குவால்காம் ட்ரீனோ 680 ஜிபியூவை கொண்டுள்ளதால், செயல்தின் உங்களை உச்சமாக இருக்கும். வேகமான ஸ்காப் சிபியூ ஆனது குவால்காம் கிரியோ 495 சிபியூ ஆகும். பல நாட்களுக்கு பேடடரி தாக்குபிடித்து நிற்கும் தன்மை கொண்டது.

மோடத்தை அதிரிக்கும் :

குறைந்த நெட்வோர் இணைப்புக்காக குவால்காம் அதனுடன் எக்ஸ்24 எல்டிஇ மோடத்தை இணைக்கிறது. எனவே எல்டிஇ வழியாக குறைந்த பிணைய இணைப்புகளில் குறைந்தபட்சம் 2ஜிபிபிஎஸ் வேகம் கிடைக்கும். குறைந்த பிணைய இணைப்பு இருந்தால், எல்டிஇ என்று அர்த்தம்.

குறைந்த நெட்வொர்க் இணைப்பு:

குறைந்த நெட்வொர்க் இணைப்புக்காக குவால்காம் அதனுடன் X24 LTE மோடத்தை இணைக்கிறது. எனவே, LTE வழியாக குறைந்த பிணைய இணைப்புகளில் குறைந்தபட்சம் 2 Gbps வேகம் கிடைக்கும்.
2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த செயலி மற்றும் லேப்டாப் ஆகியவற்றை வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை.

என்ன தொழில் செய்தால் ஆன்லைனில் சம்பாதிக்க முடியும் ?


வெளி நாட்டு ஆன் லயின் ஜாப் கம்பெனி கள் இந்தியர்களுக்கு மட்டும் 2015ல்ரூ 20420 கோடி தந்துள்ளது ..இதற்க்கு சில சான்றாக ஆன் லைனில்கிடைக்கும் வாய்ப்புகளில் சில வற்றை பார்ப்போம்
PTBC - Paid to blog creations
நிறுவனங்கள் தங்களது பொருள் மற்றும் சர்வீஸ் offer விளம்பரங்களைபோட்டிருப்பார்கள் ..அதற்க்கு வெப்சைட் களான blogger ,wordpress ஓபன்செய்து இதை அதில் போட வேண்டும் ..இதற்கு உங்களை நன்றாக
கவனிப்பார்கள்
P T C - Paid to click
உங்கள் ஈமெயில் லில் முகவரி மூலம் ரிஜிஸ்டர் செய்து போனால் தினமும்விளம்பரம் போடுவார் .அதை
கிளிக் செய்து ஒரு செகண்ட் பார்க்கணும் அவ்வளவு தான் உங்கள் வேலை..நம்மை ரிஜிஸ்டர் செய்தவர்கள்
எண்ணிக்கையை காட்டி நிறுவனங்களிடம் விளம்பரம் வாங்கி 10% தான்எடுத்து கொண்டு பணத்தை விளம்பரம் பார்ப்பவர்களுக்கு பிரித்து கொடுத்துவிடுவார்கள் .ஒரு வெப்சைட்டில் மொத்தமே 10 நிஸ்மிஷத்திற்குள் வேலைமுடிந்து விடும் .தினமும் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும்
P T C - Paid to sign up
இந்த வெப்சைட் களில் பல நிறுவங்களிடம் பேசி அவர்களது வெப்சைட்வைத்திருப்பர் .எந்த நிறுவனமும்
தங்களின் website களில் ஏராளமானபேர் ரிஜிஸ்டர் ஆக வேண்டும் என்றுவிரும்புவார்கள் .நாம் இந்த வெப்சைட் களில் சைன் அப் செய்து ரிஜிஸ்டர்ஆக வேண்டும் அவ்வளவு தான் வேலை .இதற்க்கு பணம் வரும்
PT C
இது paid to survey இந்த மாதிரி survey website களில் உங்கள் பெயர் ,உங்கள்படிப்பு ,உங்கள் பிடித்த உடை
உங்களுக்கு பிடித்த உணவு email என கேட்பர் .இதை fill செய்தால் நம்கணக்கில் பணம் வரும் .உங்களிடம்
சர்வே வாங்கிய கம்பெனிகள் உங்களது உணவு மற்றும் உடை விஷயத்தைவிற்று மற்ற கார்ப்பொரேட் கம்பெனி களிடம் விற்று காசு வாங்கி விடும்
PTA P - paid to add posting
அதாவது நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை உங்களிடம் தருவார்கள்..நீங்கள் சமூக வலைத்தளங்களில் (Facebook ,Twiter ) போன்றவற்றில் போஸ்ட்செய்ய வேண்டும் .அதற்க்கு நன்றாக கவனிப்பார்கள்
Paid to copy paste
நிறுவனங்களின் வெப்சைட் களில் உள்ள முக்கிய விஷயங்களை நீங்கள்copy செய்து மேற்குறியதை போன்று
சமூக வலைத்தளங்களில் போட வேண்டும் ..இதற்க்கு உங்கள் கணக்கில்பணம் வந்து சேரும்
Paid to captcha work
நீங்கள் ஈமெயில் தவறாக type செய்தால் கீழே ஒரு box open ஆகி கீழே உள்ளஎழுத்தை இந்த boxil type செய்யுங்கள் என்று வருமே .அப்படி வரும் எழுத்துதான் captcha..இது ஈமெயில் லில் மட்டுமல்ல பல இடங்களில்
பார்த்திருப்பீர்கள் இந்த எழுத்தை நீங்களே type செய்து ஏற்ற வேண்டும்
PTLG - Paid to lead genaration
நிறுவனங்கள் தங்கள் பொருள்களை ad செய்திருப்பார்கள் .அந்த பொருள்களை வாங்கக்கூடிய அல்லது விருப்பம் தெரிவிக்க கூடிய நபர் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை அந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கவேண்டும் அதற்க்கு பணம் தருவார்கள்
PTAM -Paid to appoinment making
நிறுவனங்கள் தங்கள் பெயருக்குடையவரின் data base தரும் .நீங்கள் அவர்களிடம் பேசி யார் விரும்புகிறார்களோ அவர்களது appoinment வாங்கி நிறுவனங்களுக்கு தர வேண்டும் ..வேலை முடிந்தது பணம்
வந்து விடும்
PTSP -paid to sales promotion
நிறுவனங்கள் தங்கள் பொருட்களை பற்றிய விவரமும் ,appoinment விவரமும் வைத்திருக்கும் நீங்கள் appoinment
தந்தவரிடம் போய் பொருட்களை பற்றி கூறினால் போதும் .sales முடிந்தாலும் முடியாவிட்டாலும் உங்களுக்கு காசு உண்டு
PAM - paid to affliate marketing
நீங்கள் இலவச வெப்சைட்களான blogger ,word press ஓபன் செய்து flipkart snapdeal amazon ஆகிய வெப்சைட் களின் link எடுத்து இதில் போட்டு உங்கள் வெப்சைட் மூலம் சேல்ஸ் நடந்தால் போதும் .நன்றாக சம்பாதிக்கலாம்
PT F - Paid to facebook
பல பேர் தங்கள் facebook இற்கு அதிகம் லைக் ஷேர் விரும்புவார்கள் அவர்களை இதற்கென உள்ள வெப்சைட் அணுகி பணம் பெற்று அவர்களிடம் பதிவு செய்திருந்த நம் facebook ற்கு அவர்களது F B யை அனுப்புவார்கள் .நாம் லைக் அல்லது ஷேர் அவர்கள் சொன்ன படி செய்யணும் .அவர்களது எல்லா status க்கும் நல்ல பணம்
வாங்கப்பட்ட ஸ்டேட்டஸ் மட்டுமே வரும் .பணமும் வந்து விடும்
PTLM - Paid to listening music
பல பணக்காரர்கள் இசை கம்பெனிகள் தங்கள் இசையை மற்றவர் கேட்ட்க ஆசை படுவார்கள் .இதற்கென உள்ள வெப்சைட் களை அணுகி பணம் தருவார் .நாம் அந்த வெபிசிடிகளில் பதிவு செய்திருந்தால் ஓரிரு
நிமிட மியூசிக் வரும் நம் அதை கேட்க வேண்டும் அவ்வளவுதான் அதற்க்கு பணம் உண்டு ..
PTCW - paid to content wrighting
நிறுவங்கள் தங்கள் பொருள் செயல் முறையை பற்றி விளக்கி இருப்பார்கள் அதை கொஞ்சம் மாற்றி மானே தேனே பொன்மானே என்று அவர்கள் கேட்க்கும் மொழில் மொழி பெயர்க்க வேண்டும் பெரும்பாலும் ஆங்கிலம் தான் கேட்ப்பார்கள் ..அதற்க்கு ஒரு A 4 பக்கத்திற்கு குறைந்தது 1000ம் கிடைக்கும் இன்றய நிலவர படி
PTFC - paid content wrighting
அவர்கள் தரும் PD F பயிலை word word file ஆக மாற்றுவது ..அவர்கள் தரும் format யை அவர்கள் கேட்பது போன்று மாற்றுவது அவ்வளவுதான்
PTSC - Paid to social media comment
நிறுவனங்களின் முகநூல் மற்றும் அவர்களின் இணையதளங்களின் பதிவுகளை படித்து comment போட்டால்
போதும் ..அதன் தவறுகளை சுட்டி காட்டினாலும் சரி பாராட்டினாலும் சரி payment உண்டு
PTT - Paid to transaction
அவர்கள் தரும் பதிவுகளை அவர்கள் கேட்கின்ற மொழிக்கு ஏற்றவாறு transaction செய்வது .இதில் பல மொழிகள் அடக்கம்
சாதாரண கம்ப்யூட்டர் ஆப்ரேட் தெரிந்தவர்கள் முதல் கம்ப்யூட்டர் நன்கு தெரிந்தவர்கள் வரை ஆன்லைனில்
வேலை கொட்டி கிடக்கிறது

ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் புதிய விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.11,990-விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்த விவோ வ்யை91 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1520பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம் விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்

சூசகமாக முடிவு எடுத்து அதிரவிட்ட வாட்ஸ் ஆப்.! என்னனு தெரியுமா?



வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தன்னை காத்துக் கொள்ளவும் சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ளவும். வணிக சாமர்த்தியமான முடிவுகளையும் எடுத்து வருகின்றது. இதில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வருமானம் ஈட்ட இதுபோன்ற நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொது மக்களையும் இந்த செயல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வருமானம் குறைவு: கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப் செயலியால் தங்களுக்கு எந்த வருமானம் இல்லை என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் செயலியால் வருமானம் இல்லை என்றும் கவலையை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஒரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளது.

வருமானம் ஈட்ட முடிவு: இந்நிலையில், இலவசமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப்புக்கு நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருமானம் ஈட்ட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் விளம்பரம்: அதன்படி, வரும் 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரவிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் வாட்ஸ் ஆப்புக்கு வருவாயை அதிகரிக்கவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லிங்குடன் விளம்பரம்: நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் வர்த்தக மாநாட்டில் இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், முதல்கட்டமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வருவது போல வாட்ஸ்ஆப் ஸ்டோரிகளுக்கு இடையே லிங்குடன் விளம்பரம் செய்யும் வசதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்!


அசுஸ் நிறுவனம் சிறந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை அன்மையில் அதிகளவு அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜென்புக் 14 என்ற லேப்டாப் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் ஜென்புக் 14 லேப்டாப் மாடலுடன் வெளிவந்த ஜென்புக் 15 மற்றும் ஜென்புக் 13 மாடல்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் விலையைப் பொறுத்தவரை ரூ.74,990-ஆக உள்ளது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த சிறப்பான அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பெசல்-லெஸ் வடிவமைப்பு 

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.19கிலோ எடைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று மிக அருமையாக பயன்படுத்த முடியும். பின்பு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக், பேட்டரி இன்டிகேட்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


கீபோர்டு மற்றும் டிராக்பேட்: 

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் சாதனத்தில் பேக்லைட் கீபோரட் மற்றும் அசத்தலான டிராக்பேட் வசதியும் உள்ளது. இந்த அம்சங்கள் வீடியோ எடிட்டிங், மற்றும் பல்வேறு ஆன்லைன் வேலைகளுக்கு மிக அருமையாக செயல்படும். மேலும் டைப்பிங் செய்ய மிக எளிமையாக பயன்படுகிறது ஜென்புக் 14 லேப்டாப் மாடல்.

சேமிப்பு: 

ஜென்புக் 14 லேப்டாப் பொறுத்தவரை இன்டெல் கோர் ஐ7 செயலி யுஎச்டி கிராபிக்ஸ் 620ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, அதேபோன்று 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி: 

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் மாடலில் 50வாட் லித்தியம் பேட்டரி இடம்பெற்றுள்ளது, இது சுமார் 4மணி நேரம் பேட்டரி பேக்அப் கொடுக்கிறது. இருந்தபோதிலும் இந்த சாதனத்தின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே: 

ஜென்புக் 14 லேப்டாப் சாதனம் பொதுவாக 14-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 92 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் சிறந்த திரை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூட அதிக வெளிச்சத்துடன் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி?



ஓட்டுர் உரிமம் மற்றும் இதர வாகனம் சார்ந்த ஆவணங்களை கையில் எடுத்து செல்ல நம்மில் பலரும் மறந்து விடுவோம். இவ்வாறு செல்லும் போது தான் போக்குவரத்து காவல் துறை நம்மை நிறுத்தி சோதனை செய்வர். இந்த பிரச்சனையை சரி செய்யவே மத்திய அரசாங்கம் எம் பரிவாஹன் எனும் அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் பயனர்கள் தங்களது வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் முறையில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இவற்றை பயனர்கள் பிளே ஸ்டோர்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டாக்யூமென்ட்களை விர்ச்சுவல் முறையில் வைத்திருப்பதும், ஆவணங்களை அசலாக கையில் வைத்திருப்பதற்கு சமம். இதனால் ஆவணங்களை ஸ்மார்ட்போனில் இருந்து காண்பித்தாலே போதுமானது.

முதலில் தேவையானவை: விர்ச்சுல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டவுன்லோடு செய்ய பயனர் தங்களது வாகன பதிவு எண் மற்றும் ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை வைத்திருக்க வேண்டும். இதனால் வழிமுறைகளை பின்பற்றும் முன் இவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.

செயலியை டவுன்லோடு செய்வது எப்படி? - கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று mparivahaan செயலியை தேட வேண்டும். - இனி வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும். - சைன்-இன் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் ஸ்மார்ட்போனிற்கு வரும் குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும்.

- இவ்வாறு செய்ததும் ஆர்.சி. ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 

- இனி வாகனத்தின் பதிவு எண் பதிவு செய்து சர்ச் செய்ய வேண்டும். 

- இனி செயலியை வாகன பதிவு எண்ணுடன் கொண்ட விவரங்களை தேடும்.

-அடுத்து Add to dasboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். விர்ச்சுவல் டிரைவிங் லைசன்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி? 

- செயலி ஹோம்ஸ்கிரீனில் இருக்கும் ஆர்.சி. டேபை க்ளிக் செய்ய வேண்டும். 

- இனி டிரைவிங் லைசன்ஸ் நம்பரை பதிவிட்டு சர்ச் செய்ய வேண்டும். 

-செயலி டிரைவிங் லைசன்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவரங்களை தரவிறக்கம் செய்யும். - இறுதியில் Add to dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

மொபைல் சார்ஜரை வாயில் வைத்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!





உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் பகுதியில் வசிக்கும் ரசியா என்பவற்றின் 2 வயதுக் குழந்தை மொபைல் சார்ஜ்ஜரை வாயில் வைத்து மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

2 வயதுக் குழந்தை ரசியா தனது 2 வயதுக் குழந்தையான ஷேஹ்வர் உடன் ஜஹாங்கீரிபாத் பகுதியில் உள்ள அவரின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். ரசியா குடும்பத்தைச் சேர்ந்த வீட்டிலிருந்த யாரோ மொபைல் போன்னை சார்ஜிங் செய்துள்ளனர். 

சார்ஜ்ர் பின்னை வாயில் வைத்த குழந்தை சார்ஜரில் இருந்த போனை சார்ஜ் செய்தவுடன் ஸ்விட்சை ஆப் செய்யாமல் போனை மட்டும் எடுத்துள்ளனர். ரசியாவின் இரண்டு வயதுக் குழந்தை விளையாட்டாக மொபைல் சார்ஜ்ர் பின்னை வாயில் வைத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளது. 

வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை தகவல் அறிந்து ஜஹாங்கீரிபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினர் கேட்டும் குடும்பத்தினர் ஒத்துழைக்காததால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 


பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுதல் குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்கள், குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும், மொபைல் சார்ஜ்ர்கள், பிளக்குகள் போன்ற மின்சார பொருட்கள் அனைத்தையும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத விதத்தில் வைத்துக்கொள்ளுமாறுபெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுதல் விடுத்துள்ளனர்.